கழுகுமலை, அக்.10: கழுகுமலையில் திருவள்ளுவர் கழக கூட்டம் நடந்தது. கோவில்பட்டி கவிமேகம் தலைமை வகித்தார். கம்பன் கழகத் தலைவர் செம்மை நதிராஜா முன்னிலை வகித்தார். கோவில்பட்டி ஆசிரியர் பிரபு, மகாலிங்கம், மாரியப்பன், கருப்பசாமி, சிவராமன் மற்றும் தமிழ் ஆர்வலர், நாயன்மார்கள் குழு பொறுப்பாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய தலைவராக பொன்ராஜ்பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவள்ளுவர் கழகச் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.